You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / கதை சொல்லும் சிலை, அதைப் போற்றும் வலைத்தளம் - விஜய் குமார் சு
கதை சொல்லும் சிலை, அதைப் போற்றும் வலைத்தளம் - விஜய் குமார் சு
கதை சொல்லும் சிலை, அதைப் போற்றும் வலைத்தளம்
விஜய் குமார் . சு
பல நேரங்களில் நம் கண் முன்னே செல்லும் காட்சிகள் நம் அகக் கண்முன்னே தெரிவதில்லை.
அதே போல் சில நேரங்களில் நாம் கண்ட ஒரு காட்சி - ஒரு சம்பவம் - ஒரு உணர்வு - ஒரு மனிதர் - ஒரு நூல்௪. நமது ஒவ்வொரு உணர்வையும் தட்டி எழுப்பி,வாழ்வின் ஜீவ நாடியை உலுக்கும்.
அதன் பின்னர் நம் வாழ்கை திசை திரும்பும். அவ்வாறு திரும்பிய எங்கள் வாழ்வின் விளைவில் உருவாகிய தளமே http://www.poetryinstone.in எங்களை கரை சேர்த்த கலங்கரை விளக்கம் அமரர் கல்கி, அவரது காவியங்கள். ஏதோ விட்ட குறை தொட்ட குறை என்று உறங்கிக் கொண்டிருந்த எங்கள் உள் உணர்வை உயிர்ப்பித்து,ஒரு மகத்தான வரலாற்றை, அரிய கலைப் பெட்டகத்தை பொன் ஏட்டில் பதிக்கவேண்டிய ஒரு கலையை வீணடிக்கும் அவலத்தை உணர்த்தியது.
சிற்பக் கலை - கருங்கல்லில் காவியங்கள் என்று தொன்று தொட்டு திகழும் இந்த அரிய செல்வங்கள் இப்போது அழிந்து வருகின்றன.
எதனால் ?
ஆயிரம் ஆண்டுகள் நின்று சிரித்த இந்த கல் ஓவியங்களை ரசிக்க இப்போது ஆள் இல்லை. ரசிக்கத் தெரிந்தால் இவற்றை சிதைய விடுவோமா? அரசனும் ஆண்டியும் போற்றி வளர்த்த கலை௪.சிற்பம் நாட்டியம் வாய்பாட்டு ஆன்மீகம் என்று ஒரு சமுதாயத்தை தாங்கி குடை பிடித்த மண்டபங்கள் இப்போது தங்கள் னண்களே சிதைந்து ஆட்டு புழுக்கையும், வெளவால்கள் குழுமும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்௪ இன்று விழிப்புணர்வு இல்லாமையால் அரசின் கண்ணில் இருந்து விலகி நலிந்து மடியும் தருவாயில் உள்ளது இந்த கலை மட்டும் அல்ல அந்த கலை சின்னங்களும் தான்.
ஆடைகளை களைவது போல் இவை ரசிகர் மனதில் இருந்து பிரிந்தது எதனால்? எங்கோ அமெரிக்கா ஜப்பான் என்று உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை தன்வசம் ஈர்க்கும் இவை ஏன் நமது கவனத்தை ஈர்க்கவில்லை. கண்ணிருந்தும் நாம் ஏன் குருடர்களாக உள்ளோம். இந்த நிலையை சற்றே மாற்ற முயலும் எங்கள் சிறிய முயற்சி இது.
நாங்கள் சிற்ப கலை வல்லுனர்கள் அல்ல,ஆனால் நல்ல ரசிகர்கள். எங்களை கவர்ந்த சிற்பங்களை உங்களுடன் எளிய முறையில் பகிர்கிறோம், அதனுடன் அவற்றை சரியான தோரணையில் காண எங்கள் சிறிய விளக்கம். நம் கலைக் கண்ணை திறக்க இது ஒரு பூத கண்ணாடி அல்ல, சிறு மூக்கு கண்ணாடி. சிலை பேசும் ஒலியை உங்களுக்கு எடுத்துரைக்கும் ஒலிப் பெருக்கி, நடக்க ஆரம்பிக்கும் குழந்தை நடை பயிலும் கை வண்டி, ஒருமுறை எங்கள் கண்ணோட்டத்தில் இந்த உயிர் ஓவியங்களை பாருங்கள்௪. உள்ளம் நெகிழுங்கள். எங்களுடன் உங்கள் படங்களை பகிருங்கள்,ஒரு புதிய விழிப்புணர்வை பரப்புங்கள்.
இந்த விழா நடைபெறும் தருவாயில் இரண்டு அற்புத சிற்ப படைப்புகளை உங்களுடன் பகிர்வதில் நாங்கள் பேரின்பம் அடைகிறோம். பொதுவாக ஆலயங்களுக்கு நாம் செல்லும் பொது, நேராக கருவறைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி விடுகிறோம். அப்படி அல்லாமல் இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு சுற்றிலும் இருக்கும் சிறு சிற்பங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதை வலியுர்தவே இந்த பதிவு.
இவ்வாறு நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள சிற்பங்கள் - ஒன்று தஞ்சை பெரிய கோயில் தக்ஷன் கதை , மற்றொன்று தாராசுரம் ஆலயத்தின் சுந்தரர் புராணம். இவற்றை படித்து முடித்த பின்னர், கண்டிப்பாக அடுத்த முறை இந்த இடங்களுக்கு செல்லும் பொது இது போன்ற ஏனைய அற்புத வடிவங்களை பார்க்காமல் திரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
முதல் கதை - தக்ஷன் வரலாறு
தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச்
சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு
மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.
அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் தன் தியானத்தில் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.
ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷாயணியை எவரும் விசேஷமாக கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.
அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷன் தலையைக் கொய்து - அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும்அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.
பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் இது இருக்கும் இடம் நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்கள்
பிடிக்கப்பட்டுள்ளன. கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன - ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .
முதல் தலை கொய்தல் - முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி (நீங்கள் பார்க்கும் போது மிகவும் பின்னால் இருக்கும் இடம்) - அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.
கீழே - முக்கிய காட்சி - தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் (அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் - அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி. அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்ப்போர் அலறி பயந்து ஓட௪என்ன ஒரு அருமையான படைப்பு, மூன்று பெண்மணிகள், அவர்களை அடுத்து மூன்று முனிவர்கள், அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் அந்தக் கோரக் காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே, ஓடும் படி செதுக்கி உள்ளான்.
சிற்பி.. கடைசியில் இருவர் - ஓட ஆரம்பித்தே விட்டனர். (சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள்)
சரி - அடுத்த பாகம் - மூன்று ரிஷிகள் - மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி, தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் - அதுவும் அந்த ஈசனின் வடிவம் - மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.
ஈசனும் மனம் இறங்க - கடைசி காட்சி - மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க, ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் - மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.
இதோ தேவாரம் குறிப்புகள் (நன்றி: http://www.thevaaram.org/)
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.
கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.
சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப்
பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!
இரண்டாவது கதை - பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம்:
இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்று அறிந்துகொள்வது சற்றே கடினம்தான், ஆனால் பெரியபுராணத்தில் வரும் பாத்திரங்களும், நிகழ்வுகளும் நமக்கு தெரிந்திருக்குமானால் இந்த சிற்பங்கள் நமக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.
ஒரு கோயிலின் முன் இருவர், ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல, மறு கரம் உயர்த்தி, ஏதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.
சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் வழியில், திருக்கண்டியூர் இறைவனை வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிரே தோன்ற, சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவனைப் பணிய வேண்டுமென்று கூற, ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு௪
130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4
131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4
132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4
133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4
134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4
135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4
136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4
137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4
138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்
(நன்றி மதுரை திட்டம்)
சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் (நம் பார்வையில்) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி௪வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள், காவிரியை நோக்கி (வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ?)
இனி ஆலயங்களுக்குச் சென்றால் கருவறையில் இறைவனை வணங்குவதோடல்லாமல் சுற்றிலும் இருக்கும் கதை சொல்லும் சிலைகளையும் பார்ப்பீர்கள் அல்லவா!



