You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / கோபுரம் தந்த கலைஞர் R. கிருஷ்ணராவ் - ரகோத்தமன்

கோபுரம் தந்த கலைஞர் R. கிருஷ்ணராவ் - ரகோத்தமன்


By humble - Posted on 24 February 2010

கோபுரம் தந்த கலைஞர் R. கிருஷ்ணராவ்

ரகோத்தமன்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிறுவன், தினமும் காலையில் மேற்குக் கோபுர தரிசனத்துக்கு தனது மொட்டை மாடியில் சென்று அந்த கோபுரத்தின் அழகை அருந்தி ரசித்து கொள்வான். அதன் வானளாவிய உயரமும், பரந்த தோற்றமும், பொற்றாமரை குளத்தின் மலர்களும், மதுர பக்தி ரசம்கொட்டும் பாட்டும், பக்தர்களின் கூட்டமும் அவனை மிகவும் கவர்ந்திர்க்கவேண்டும். என்று பார்த்தாலும் முதன்முறையாக பார்த்தது போல் ஒரு அனுபவம். இருபது வருடங்களாக பார்த்த ஒரு அனுபவமும், ரசனையும் என்றோ ஒரு நாள் தான் அதை அழிக்க முடியாத ஒரு காவியத்தில் பிரசவிக்க போகிறோம் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டான்.

பல வருடங்களுக்கு பின் தனக்கு தமிழ்நாட்டின் அரசு சின்னத்தை படைக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முனைவர் R. கிருஷ்ணராவ் தன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இத்தனை வருடங்களாக மனதில் பதிவு செய்த, ரசித்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் மேற்கு கோபுரத்தை அரசு சின்னமாக ஓவியத்தில் படைத்தார். இது நடந்த காலம் 1948, இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு வருடத்தில்.

எழும்பூரில் உள்ள கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸி¢ல் அப்பொழுது இருந்த கல்லூரி முதல்வர் D. P. ராய் சௌதுரிக்கு வந்த அரசு ஆணைப்படி (commercial art) விளம்பர பிரிவில் ஆசிரியராக பணிபுரிந்த R. க்ரிஷ்ணராவிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. R. கிருஷ்ணராவ் அவர்கள் தன் படைப்பில் அரசு சின்னமாக பொறிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை தேர்ந்து எடுத்தார். இந்த தமிழ்நாட்டின் அரசு சின்னம், அப்பொழுது 1948ல் சென்னை மாநில அமைச்சராக இருந்த திரு. ஓமந்தூர் ராமச்சந்திர ரெட்டியார் அவர்களால் அங்கிகாரம் செய்யப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வெவ்வேறு கோணங்களில் அவர் தனக்கு பிடித்த நீர் வண்ண ஓவிய பாணியில் படைப்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். Watercolour என்ற நீர் வண்ண ஓவிய பாணியில் அவருக்கு குருவாக இருந்தவர் முனைவர் D. P. ராய் சௌதுரி மற்றும் K.C.S. பணிக்கர். கோவில் ஓவியம் அல்லது Temple Artல் கிருஷ்ணராவ் வல்லுனராக இருந்து தஞ்சை பெரிய கோவில், திருமலை வெங்கடாசலபதி கோவில், கங்கை கரை வாரணாசி என கோவில்களை பல ஒவியங்களாக படைப்¢பதில் அவருக்கு அலாதி பிரியம். மேலும் தமிழ்நாட்டின் இயற்கை காட்சிகளும் குறிப்பாக பனை மரங்கள் சூழ்ந்த எருது கூட்டங்களும் நீர் வண்ண ஓவியங்களாக படைத்துள்ளார். 1968ல், கல்லூரி முதல்வராக பதவி பெற்ற பின்னரும் நீர் வண்ண ஓவியத்தில் ஊதா, மஞ்சள், பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் செய்த Entrance to the temple gate, Car festival Madurai, Varanasi Bazaar, Temple tank என்ற படைப்புகள் லலித் கலா அகாடமி மற்றும் பல ஓவிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடின் அரசு சின்னம் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் என்று பல குழப்பம் இன்றே நிலவுகிறது. அது மதுரை மேற்கு வாசல் கோபுரம் என்பதற்கு பல குறிப்புகள் சொல்லலாம். ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவிலில் சுதை சிற்பங்கள் கிடையாது ஆனால் முனைவர். கிருஷ்ணராவ் படைத்த சின்னத்தில் சுதை சிற்பங்கள் நூண்கலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1971 இல் தமிழக அரசின் வேண்டுகோளின்படி லாட்டரி சீட்டின் சின்னம் படைத்தார். ஒரு சிறுவன் வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலை 1 ருபாய் என காட்டியபடியும், இடது கையில் பணமூட்டையும் வைத்தவாரும் இருக்கும் சின்னம்.

கோவில் ஓவியங்களை தவிர முனைவர் க்ரிஷ்ணராவவின் கவனங்களை திருப்பியது கோலங்கள். கலை எல்லா இடத்திலும்¢ உள்ளது என்பது அவரின் சொல், அது உண்மையும் கூட. காலை வேளையில் பெண்கள் வாசலில் போடும் நித்ய செயல் ஒன்று கோலம் இடுவது. அதில் கலையுணர்வு தவிர கணக்கும் உண்டு. ஒரு சின்னத்தின் வெளிபாடு கோலம், ஒரு கலாச்சாரத்தின் வெளிபாடு சின்னம். இந்த விஷயத்தை எத்தனை எளிமையாக கோலம் சொல்லுகிறது என்பதை தன் வாழ்கையில் உணர்ந்தவர் முனைவர் கிருஷ்ணராவ்.

மேலும் படிக்க:
1. R. K. Rao; Contemporary Indian Art Series By Anjali Sircar, Lalit Kala Academy, New Delhi, 2006 ISBN: 8187507195.
2. Who's Who by Tamilnadu ovia Nunkalai Kuzhu
3. "A fascination for temple architecture" Lakshmi Venkataraman. The Hindu, Sunday, August 27, 1995.

Visitor Map

Locations of visitors to this pagecounter for wordpress

Navigation