வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.
பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத் தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.