En Sarithiram - 11 & 12 - கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் (tamil audio book)
  • Makkale vanakkam - here are the next 2 episodes from Dr U Ve Sa's


    கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்து கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின் நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. 'ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே'
    என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது,

    'இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ?
    திருமால் அளந்தது மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே' என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

    "சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
    தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த
    மாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
    ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே."

    இத்தகைய வரலாறுகள் பல உண்டு....

    http://youtu.be/OJsj0FTBJNo

    Sri Sri
    Like our FB page https://www.facebook.com/tamilaudiobook
    http://www.tamilaudiobooks.com/

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters