> > மயிலாடுதுறையில் > பள்ளம் தோண்டிய போது > கிடைத்த சுவாமி, > அம்பாள் சிலை! > ஆகஸ்ட் 23,2012 > மயிலாடுதுறை: > மயிலாடுதுறை அருகே > பள்ளி கழிவறை கட்ட > பள்ளம் தோண்டிய போது, > சுவாமி, அம்பாள் சிலை > உள்ளிட்ட பொருட்கள் > கிடைத்தது. நாகை > மாவட்டம் மயிலாடுதுறை > அடுத்த பாளையூரில் > உள்ள ஆதிதிராவிடர் > தொடக்கப் பள்ளியில் > தாட்கோ மூலம் கழிவறை > கட்டுவதற்காக நேற்று > பள்ளம் தோண்டப்பட்டது. > அப்போது மூன்று அடி > ஆழத்தில், ஒரே > பீடத்தில் அமைந்துள்ள > சிவன், பார்வதி > சிலைகள், > உடைந்த திருவாட்சி, > விளக்கு, தாம்பூலத் > தட்டு, 2 அடி உயரத்தில் > குத்து விளக்கு > உள்ளிட்ட பூஜை > செய்யும் பொருட்கள் > கிடைத்தன. இதனை அறிந்த > ஏராளமான மக்கள் > கூட்டமாக வந்து சுவாமி, > அம்பாளை தரிசித்தனர். > பள்ளியின் தலைமை > ஆசிரியர் > வெங்கடாஜலபதி, வி.ஏ.ஒ., > பாலசுப்ரமணியன் > கொடுத்த தகவலின் > பேரில் குத்தாலம் > தாசில்தார் ராமநாதன், > மண்டல துணை தாசில்தார் > சண்முகம் ஆகியோர் > சிலைகளை > கைப்பற்றி தாலுகா > அலுவலகத்திற்கு > கொண்டு வந்தனர். > பாளையூரில் 1968ல் இந்த > பள்ளிக்கான கட்டடம் > கட்ட பள்ளம் தோண்டிய > போது அம்பாள் சிலை > கிடைத்துள்ளது. அதனால் > இந்த இடத்தில் கோவில் > ஏதேனும் > இருந்திருக்கலாம் > எனவும், அது > காலப்போக்கில் > அழிந்திருக்கலாம் > என்றும் அப்பகுதி > மக்கள் தெரிவித்தனர். > தற்போது பாளையூரில் > கிடைத்துள்ள சிலை > உள்ளிட்ட பொருட்கள் > ஐம்பொன்னால் ஆனவையா > அல்லது செம்புச் > சிலையா என அதிகாரிகள் > ஆய்வு செய்து > வருகின்றனர். > > மயிலாடுதுறை: > மயிலாடுதுறை அருகே > பள்ளி கழிவறை கட்ட > பள்ளம் தோண்டிய போது, > சுவாமி, அம்பாள் சிலை > உள்ளிட்ட பொருட்கள் > கிடைத்தது. நாகை > மாவட்டம் மயிலாடுதுறை > அடுத்த பாளையூரில் > உள்ள ஆதிதிராவிடர் > தொடக்கப் பள்ளியில் > தாட்கோ மூலம் கழிவறை > கட்டுவதற்காக நேற்று > பள்ளம் தோண்டப்பட்டது. > அப்போது மூன்று அடி > ஆழத்தில், ஒரே > பீடத்தில் அமைந்துள்ள > சிவன், பார்வதி > சிலைகள், உடைந்த > திருவாட்சி, விளக்கு, > தாம்பூலத் தட்டு, 2 அடி > உயரத்தில் குத்து > விளக்கு உள்ளிட்ட பூஜை > செய்யும் பொருட்கள் > கிடைத்தன. இதனை அறிந்த > ஏராளமான மக்கள் > கூட்டமாக வந்து சுவாமி, > அம்பாளை தரிசித்தனர். > பள்ளியின் தலைமை > ஆசிரியர் > வெங்கடாஜலபதி, வி.ஏ.ஒ., > பாலசுப்ரமணியன் > கொடுத்த தகவலின் > பேரில் குத்தாலம் > தாசில்தார் ராமநாதன், > மண்டல துணை தாசில்தார் > சண்முகம் ஆகியோர் > சிலைகளை கைப்பற்றி > தாலுகா > அலுவலகத்திற்கு > கொண்டு வந்தனர். > பாளையூரில் 1968ல் இந்த > பள்ளிக்கான கட்டடம் > கட்ட பள்ளம் தோண்டிய > போது அம்பாள் சிலை > கிடைத்துள்ளது. அதனால் > இந்த இடத்தில் கோவில் > ஏதேனும் > இருந்திருக்கலாம் > எனவும், அது > காலப்போக்கில் > அழிந்திருக்கலாம் > என்றும் அப்பகுதி > மக்கள் தெரிவித்தனர். > தற்போது பாளையூரில் > கிடைத்துள்ள சிலை > உள்ளிட்ட பொருட்கள் > ஐம்பொன்னால் ஆனவையா > அல்லது > செம்புச் சிலையா என > அதிகாரிகள் ஆய்வு > செய்து வருகின்றனர். > > > >