மிகவும் பாதுகாப்பாக எல்லாம் செய்திருக்கிறார்கள் என்னும் போது மின்சாரத்திற்கு எங்குதான் போவது - கூடங்குளத்தை நம்புவதைத் தவிர ! ஏற்கனவே சொல்லியும் சொல்லாமலும் "பவர் கட்" செய்யும் நாட்டில் மக்கள் எங்குதான் போவது ? யாரிடம்தான் கேட்பது ? பிள்ளைகள் எப்படித்தான் படிப்பது, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளுக்குச் சென்று கை நெறைய சம்பாதிப்பது ...? இதற்கு என்னதான் தீர்வு ? இன்னும் பல நாடுகளில் பெருமளவு அணு உலைகள் இயங்கும் போது, இவ்வளவு நாள் தூங்கி விட்டு இப்போது தடுப்பது என்ன நியாயம் ?
எப்படியும் உலகம் 2027க்குள் அழியப் போகிறது என்று சொல்லுகிறார்கள் ! அதற்குள் இதைத் தடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன ? ஆடும் வரை ஆட்டம் !