Thirukkalyanam at Thiruvalansuzhi - why 2 wives for gods
  • உலகில் உயர்ந்தவற்றை இறைவனுக்கே அர்ப்பணிப்பது நம் பண்பாடு. அதே போல் ஆசைகளையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதும் நம் பண்பாடு.

    மனிதனால் விட முடியாத ஆசைகள் மூன்று. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. அகவே மனிதன் மண்ணையும், பொன்னையும் இரு பெண்ணாக்கி அந்த ஆண்டவனுக்கே அர்ப்பணித்தான். ( மண் - பூதேவி, பொன் - ஸ்ரீதேவி ).

    அதுபோல் ஒரு மனிதனுக்கு தேவையானவை இரண்டு. ஒன்று அறிவாகிய புத்தி. மற்றது அந்த அறிவை செயலாக்கிக் கிடைக்கும் வெற்றி. ( சித்தி). ஆகவே விநாயகனுக்கு அவன் அந்த இரண்டையும் தந்தான்.

    ஆசை ஆகிய இச்சை. அந்த இச்சையால் விளையும் காரியம் ( கிரியை) அவற்றால் கிடைக்கும் ஞானம் இவற்றை ஒன்றாக்கி - ஞான முருகனுக்கு இச்சை கிரியை சக்திகளை அர்ப்பணித்தான்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters