5.திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் கணபதியின் பெயர் வாதாபிகணபதி.
எனவே வாதாபிப் போருக்கு முன்பு தமிழ் நாட்டில் கணபதியே இல்லை.
அதாவது சிறுதொண்டரும், திருஞான சம்பந்தருமாகச சேர்ந்து தமிழ்நாட்டில் கணபதி வழிபாட்டை நிறுவிவிட்டார்கள். ஒரு பேச்சுக்கு கணபதி வாதாபியில் இருந்துதான் வந்தார் என்றே வைத்துக் கொள்வோம்.சிறுத்தொண்டருக்கு முன்பு யாருமே தமிழ் நாட்டில் இருந்து வட நாட்டுக்கோ, இல்லை வட நாட்டில் இருந்து தமிழ் நாட்டுக்கோ வந்ததே இல்லை.என்று வைத்துக் கொண்டால்தான் கணபதி பற்றி தமிழ் நாட்டுக்குத் தெரியாது என்று கொள்ள முடியும்.தமிழ் நாட்டில் நடந்த வேள்விகளைப் பற்றி புறநானூறு,,சிலப்பதிகாரம் எனப் பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. அவை எல்லாம் கணபதி வழிபாடு இல்லாமல்தான் நடந்திருக்குமா? அதாவது வடநாட்டில் ஒரு மாதிரியாகவும்,தென் நாட்டில் ஒரு மாதிரியாகவும் நடந்தன என்று நம்ப வேண்டியதுதான்.
பெரிய புராணம் சிறு தொண்டர் வாதாபியிலிருந்து கணபதியை எடுத்து வந்தார் என்று குறிப்பிடவே இல்லை.ஆனால் பெரிய புராணமே அப்பர் பெருமான் மகேந்திரன் காலத்திலேயே கணபதியை பாடியதைக் குறிப்பிடுகிறதே? ஆகப் பெரிய புராணத்தில் உள்ள நேர் குறிப்பை வீடுவிட்டு இல்லாத ஒன்றை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்?