பங்குனி உத்திரம். இவ்விழாப் பற்றி பல பாடல்களும், குறிப்புகளும் இருந்தாலும் இன்று நாம் காணப்போவது திருவரங்கத்துப் பங்குனி உத்திரம். அரங்கன் பங்குனி மாதத்தில் உறையூருக்குச் சென்று சோழ இளவரசியை மணந்து பின் அரங்கம் திரும்பி வருவார். இதனால் கோபம் கொண்ட தாயார் பிணங்கி நிற்க, பின் சமாதானமாகி, இருவரும் இணைந்து காட்சி அருளுவர்.
இந்த விழா எப்பொழுது தொடங்கியது? நாம் அறியோம். சமீபத்தில் நாம் கோயில்கள் உருவான காலம் பற்றி விவாதித்தோம். சங்க இலக்கிய மேற்கோள்கள் எல்லாம் காட்டி விவாதித்தோம். இந்த விழாவும் சங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூறு பாடல் எண்137 . தலைவி தன் நிலையை சோழர்களின் உறையூர் நகரத்து அரங்கம் ( ஆடிடோரியம்) பங்குனி விழா முடிந்தபின் இருப்பதை ஒப்பிட்டுக் கூறுகிறாள்.
பங்குனி உத்திரம். இவ்விழாப் பற்றி பல பாடல்களும், குறிப்புகளும் இருந்தாலும் இன்று நாம் காணப்போவது திருவரங்கத்துப் பங்குனி உத்திரம். அரங்கன் பங்குனி மாதத்தில் உறையூருக்குச் சென்று சோழ இளவரசியை மணந்து பின் அரங்கம் திரும்பி வருவார். இதனால் கோபம் கொண்ட தாயார் பிணங்கி நிற்க, பின் சமாதானமாகி, இருவரும் இணைந்து காட்சி அருளுவர்.
இந்த விழா எப்பொழுது தொடங்கியது? நாம் அறியோம். இந்த விழா சங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூறு பாடல் எண்137 . தலைவி தன் நிலையை சோழர்களின் உறையூர் நகரத்து அரங்கம் ( ஆடிடோரியம்) பங்குனி விழா முடிந்தபின் இருப்பதை ஒப்பிட்டுக் கூறுகிறாள்.