ராம ராவண யுத்தம் எத்தனை நாட்கள் நடந்தன? தமிழ்நாட்டு வழக்குப்படி 18 மாதங்கள் என்று ஒரு கணக்கு.திரு மு ராகவ ஐயங்கார் அவர்கள் இது பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். அவரது கட்டுரையை தற்க்கால உரை நடையில் எடுத்து எழுதி உள்ளேன்.
தமிழகத்தில் மூன்று போர்கள் இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அவை கிருத யுகத்தில் நடந்த தேவாசுர யுத்தம், திரேதா யுகத்தில் நடந்த ராம ராவண யுத்தம், த்வாபர யுகத்தில் நடந்த குருக்ஷேற்ற யுத்தம்.
18 நாட்கள் நடந்த போர் , மகாபாரத யுத்தம் நம் அனைவருக்கும் தெரியும். 18 நாழிகை நடந்த போர் இவைகளுக்கு ஒப்பாக செங்குட்டுவன் நடத்திய போர். உரை ஆசிரியர்கள் குறிப்புகளின்படி 18 ஆண்டு நடந்தது தமிழ் இலக்கியங்கள் பாடும் தேவாசுர யுத்தம். 18 மாதம் நடந்தது ராம ராவண யுத்தம்.
தமிழ் நாட்டில் ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்ததாகக் கூறும் ஒரு மரபு சிலப்பதிகார காலத்திலயே இருந்திருக்கிறது.
திரு மு ராகவ ஐயங்கார் அவர்கள் இது பற்றி ஆராய்ந்து, கீழ் வரும் கம்ப ராமாயணப் பாடலைக் குறிப்பிட்டு ,இப்பாடலின் பொருளாவது சூர்பனகை மூக்கை அறிந்ததில் தொடங்கிய போர், ராவணன் சிரத்தை அறுத்ததில் முடிந்தது என்பதாம். எனவே இதைக் கணக்கிட்டு தமிழர்கள் 18 மாதப் போராகக் கூறி இருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.
(கம்ப ராமாயணம் - சூரபனகைப் படலம்) கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின், அக் கொடியாள் முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம், மலை துமித்தென, இராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு நாள் கொண்டது, ஒத்தது, ஒர் தன்மை
தமிழ்நாட்டில் ராமாயணம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதற்கு இன்னும் ஓர் சான்று.