தமிழ் நாட்டில், கண்ணன் பிறந்த நாளில் நாம் செய்யும் பல தின் பண்டங்கள் சற்று மாறுபட்டவை.
அதிலும் இந்த சீடை, அப்பம், நாவல் பழம், அக்கார அடிசில் முதலானவை தமிழ் நாட்டிலும் . ஆந்திரத்தின் சில பகுதிகளில் மட்டுமே செய்யப் படுகின்றன.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்குத் தந்த, கண்ணன் உண்டதாகக் கூறும் பல தின் பண்டங்களை நாம் இன்றும் கண்ணன் பிறந்த நாளில், கண்ணனுக்குப் படையல் செய்கிறோம். கருப்பு எள் உருண்டை மட்டும் விட்டு விட்டோம். . இந்த சீடைப் படையல் 1100 ஆண்டுக்கும் மேற்ப்பட்ட பழமையானது. இந்த மரபைப் பேணுவோமாக.
கடந்த கிருஷ்ணா ஜெயந்தியின்போது பிரசுரிக்கப்பட்ட என் கட்டுரை. இந்த ஆண்டு சற்று விரிவாக எழுதியுள்ளேன்.
தமிழ் நாட்டில், கண்ணன் பிறந்த நாளில் நாம் செய்யும் பல தின் பண்டங்கள் சற்று மாறுபட்டவை.
அதிலும் இந்த சீடை, அப்பம், நாவல் பழம், அக்கார அடிசில் முதலானவை தமிழ் நாட்டிலும் . ஆந்திரத்தின் சில பகுதிகளில் மட்டுமே செய்யப் படுகின்றன.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்குத் தந்த, கண்ணன் உண்டதாகக் கூறும் பல தின் பண்டங்களை நாம் இன்றும் கண்ணன் பிறந்த நாளில், கண்ணனுக்குப் படையல் செய்கிறோம். கருப்பு எள் உருண்டை மட்டும் விட்டு விட்டோம். . இந்த சீடைப் படையல் 1100 ஆண்டுக்கும் மேற்ப்பட்ட பழமையானது. இந்த மரபைப் பேணுவோமாக.
கண்ணன் மீது ஒரு தாய் கூறும் புகார். யசோதையே உன் மகன் என் வீட்டில் புகுந்து,என் மகளுக்கு "வா நாவற்பழம் வாங்கித் தருகிறேன் " என்று கூட்டிச் சென்று,கொல்லையில் நாவற்பழம் விற்கும் பெண்ணிடம் என் மகளின் கை வளையல்களைக் கழற்றித் தண்டு நாவற்பழம் வாங்கித் தின்றுவிட்டு, நான் ஒண்ணுமே பண்ணலே என்று சாதிக்கிறான்.