வந்து குவிந்த வாழ்த்து மடல்கள்களில் சில

முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, தென் கொரியா

அன்பான பொன்னியின் செல்வர்களே!

கல்கியின் மிகப்பெரிய சாதனை என்பது அழகிய கற்பனையை தமிழர் மனதில் விதைத்தது. புனைவற்ற சரித்திரம் என்பது அலங்காரமில்லாத நாட்டிய அரங்கேற்றம் போல. சரித்திரத் தொடரில் கற்பனையைப் புகுத்தி சரித்திரம் போலவே நம்மை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார். இங்கிருக்கும் கூட்டமே அதற்கு சாட்சி. இங்குள்ள எத்தனை பேர் கனவில் வந்தியத்தேவனும், பழுவேட்டரை யர்களும், குந்தவியும், ஆழ்வார்கடியானும்¢ வந்திருப்பர்! அந்த அழகிய சோழ வள நாட்டை நம் கண் முன்னே நிறுத்தியவர் கல்கி. அவருக்கு துணை போனவர் ஓவியர் மணியம். ஒரு தொடர்கதை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இத்தனை தமிழர்களை இணைக்கும் என்பதே கல்கியின் கற்பனைத்திறனுக்கு சாட்சி. ஆயிரம் பேருக்கு கனவு இருந்தாலும், அவர்களை நொடிப்பொழுதில் இணைக்கும் திறன் இணையமென்று அழைக்கப்படும் இண்டர் நெட்டிற்கு இருக்கிறது. ஒருவகையில் இந்த நிகழ்ச்சி இணையத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

அந்த அதிசய மின்னுலகில், "வாழ்க நிரந்திரம்" எனும் கோஷத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழின் அரிய பல பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாத்து வருகிறது. இந்த முயற்சி வெளிநாட்டில் வாழும் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தமிழின் சீரிளமை என்றும் குன்றாத வண்ணம் வைத்திருக்கும் வித்தைகளை உலகத் தமிழர்களுக்கு கற்றுத் தருகிறது. இப்பெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களை மின்தமிழ் எனும் கூகுள் மடலாடற் குழுவில் கலந்து கொண்டு தமிழின் வளம் சேர்க்கும் விதங்களை அறிந்து கொள்ள அழைக்கிறேன். நாம் எல்லோரும் முயன்றால் தமிழ் மின்னுலகில் என்றும் வாழும்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.

சுபாஷினி ட்ரெம்மல், துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, ஜெர்மனி

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரவை பெருவிழா நடைபெறுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒரு மொழியின் இலக்கியங்கள் அந்த மொழியைச் சார்ந்துள்ள இனத்தை அடையாளம் காட்டும் வரலாற்று சான்றுகள். இலக்கிய வளம் பொருந்திய தமிழ் மொழியில் தலை சிறந்த காவியங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த காவியங்கள் நமது சரித்திர உண்மைகளைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்திருப்பது நமது தமிழ் மொழியின் சிறப்பு. அத்தகைய சிறப்புமிக்க இலக்கியங்களுள் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இன்று இந்தப் வரலாற்றுப் பேரவையின் வழியாக மீண்டும் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டு இலக்கிய ரசனையோடு கலந்த சரித்திர தேடலை வளர்ப்பதில் நாட்டம் கொண்டு இயங்கி வெற்றி கண்டுள்ளது.

தமிழ் மொழியில் உள்ள இன்னமும் பதிப்பிக்கப்படாத பழம் சுவடிகள், பதிப்பிக்கப்பட்டும் மறுமதிப்பு காணாத பழம் நூல்கள், அச்சு வடிவம் பெறாத வாய்மொழி இலக்கியங்கள், தமிழர் வாழ்க்கை முறை, போன்ற கலாச்சார பண்பாட்டு அம்சங்களை இன்றைய இணைய தொழில் நுட்பம் வழி மிக எளிதாக பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவதற்கான் சாத்தியங்கள் பெருகி உள்ளன. இன்றைய நிலையில் அன்றாட அலுவல்களின் மத்தியில் மொழி, ஆவண பாதுகாப்பு, சரித்திர ஆய்வு போன்றவை ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு மட்டுமே உரிய பொறுப்பு என்று கருதி இவ்வகை விஷயங்களில் ஆர்வம் இல்லாது செல்கின்ற நிலை தொடர்ந்தால் நமது இனத்தின் பெருமைகளை, சிறப்புக்களை அதன் தொன்மையைப் பிரதிபலிக்கும் ஆவணங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். சிதிலமடைந்த ஆலயங்களை மற்றும் கலைக்கூடங்களைப் பேணிக் காப்பதில் பொறுப்புள்ள ஒரு சமுதாயம், அழிந்து வரும் பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து பாதுகாக்கும் ஒரு சமுதாயம், வாய்மொழிச் செய்திகளை, வரலாற்று ஆவணங்களை தமது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமிக்க ஒரு சமுதாயமாக நமது தமிழ் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக ஆலயப் புணரமைப்பு தொடர்பான விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகள், கல்வெட்டுத்துறை ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் வகுப்புக்கள் போன்ற சீரிய பணிகளை ஏற்பாடு செய்து அவற்றில் ஈடுபட்டு இயங்கி வருவதைக் காணமுடிகின்றது.

இந்த பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் விழா நிகழ்வில் பங்கு கொள்வதன் வாயிலாக, பழமை சிறப்புக்களை வெளிப்படுத்தும் சரித்திர உண்மைகளை அரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அமைவதோடு இவ்வகை விஷயங்களில் மென்மேலும் விழிப்புணர்ச்சியை நம் சமுதாயத்தில் உருவாக்க முடியும் என்பது உறுதி. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் அனைத்து முயற்சிகளும் சிறப்புடன் தொடரவும், இந்தப் பேரவை தன் நோக்கத்தில் வெற்றி பெறவும் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்.

For Varalaatru Aarvalar Kuzhu (K.Ramachandran)

It is VARALAATRU AARVALAR KUZHU, NAGAPATTINAM thanking you all for carrying our district’s most familiar son Mr. Kalki’s story to all parts of the world. We are a new elementary school started under the trees, clouds & waves in Nagapattinam soil
searching, identifying, digging, observing, learning , visually showing, teaching thus sowing history seeds in the keezhai Thanjai area (that is Integrated Nagapattinam District. -Thiruvarur,Nagapattinam districts) We feel joining hands with your team and will together in bringing out the glories of our area to the world. We are eager to attent this great function on behalf of our area.